Monday, 26 September 2016

வாகன விபத்துக்கான காரணம் என்ன?

1. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2 .அதிவேகம்
3. வாகனங்கள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால்
4. போதிய. தூக்கம் ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்
5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால்
6 . தரமற்ற வாகனங்கள் ஓட்டுவதால்
7. குண்டும் குழியுமான சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன
8. சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது - அலட்சியம்
9.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இல்லாதது / சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும்
10. சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.
உங்கள் உயிர் மட்டுமல்ல, அடுத்தவர்கள் உயிரும் விலைமதிக்க முடியாததுதான்..
விபத்துக்களை தவிர்க்க சில வழிகள்:
1. வாகனங்களை சாலைவிதிகளின் படி ஓட்டுவது.
2. நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்குமேல் வாகனத்தை ஓட்டாமல் இருப்பது
3. முறையான சைகைகள் இல்லாமல் வாகனங்களைத் திருப்புவது மற்றும் முந்திச் செல்வதை தவிர்ப்பது
4. கண்கூசும் விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்ப்பது
5. தூக்கக் கலக்கத்தில், மது போதையில் வண்டி ஓட்டாமல் இருப்பது
6. பேசிக் கொண்டே வண்டி ஓட்டாமல் இருப்பது
7. செல்போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது
8. அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் செல்லாமல் இருப்பது

No comments:

Post a Comment